தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் 73 வது சுதந்திர தின நிகழ்வுகள்!





ஊடகப் பிரிவு,
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில்.


லங்கையின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், பதிவாளர் அப்துல் சத்தார் தலைமையின் கீழ் இன்று காலை 8 மணியளவில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட முன்றலில் சமய வழிபாடுகளுடன் தேசியக் கொடி ஏற்றி தேசியக் கீதமும் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், நிதியாளர், பொறியியலாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர்கள் பங்குபற்றினர். இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக் குழுவினரால் சுதந்திர தினத்திற்கான மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்றது.

அடுத்த நிகழ்வாக சுதந்திர தினத்தினை கௌரவிக்கும் முகமாக மர நடுகையும் இடம்பெற்றது. இது இலங்கையின் 73வது சுதந்திர தின கொண்டாட்டம் என்பதால் 73 மரக் கன்றுகள் நடபட்டமை குறிப்பிடதக்க தாகும்.

இன்று கொண்டாடப்படும் இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்தினர்கள் மிக மகிழ்சியுடன் பங்கேற்றனர். உள்நாட்டு சிவில் யுத்தத்திற்குப் பின்னரான இலங்கைத் தேசத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வளமான நாடாக மாற்றியமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது.

இவ்விலக்கினை அடைந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களினதும் ஏனைய அரசியல் தலைவர்களினதும் பொது மக்களினதும் பங்குபற்றுதலுடன் கூடிய வளமான நாட்டினை கட்டியெழுப்புதல் இன்றியமையாததாகும்.
 








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :