கூட்டமாக வந்த 5 யானைகளில் ஒரு யானை உயிரிழப்பு: இறந்த யானைக்கு மருத்துவப் பரிசோதனை!

எச்.எம்.எம்.பர்ஸான்-

கூட்டமாக வந்த ஐந்து யானைகளில் ஒரு யானை உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று (2) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள இறால் பண்ணையை கடந்து மக்கள் குடியிருப்புக்குள் செல்ல முற்பட்ட போதே ஐந்து யானைகளில் ஒன்று இறந்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த யானையை ஆராய்ச்சி செய்வதற்காக இன்று மாலை அம்பாறை மிருக வைத்தியசாலை வைத்திய அதிகாரி எச்.என்.ஏ.சுரன்ஜித் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து யானையை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இவ் மருத்துவப் பரிசோதனையில் யானை மின்சாரம் தாக்கியதன் காரணத்தால் ஏற்பட்ட மாரடைப்பில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் எச்.என்.ஏ.சுரன்ஜித் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :