தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ. இராசமாணிக்கத்தின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு கூரல்!



லங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ. இராசமாணிக்கத்தின் 108 ஆவது ஜனனதினம் நேற்று(புதன்கிழமை) நினைவு கூரப்பட்டுள்ளது.
கடந்த 1952 ஆண்டு தமிழ்மக்களின் பிரதிநிதியாக பட்டிருப்பு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்ததுடன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவராகவும் 1970 ஆண்டு வரை செயற்பட்டிருந்தார்.
இந்தநிலையிலேயே களுவாஞ்சிக்குடியிலுள்ள சி.மூ. இராசமாணிக்கத்தின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு கூறல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் இரா. சாணக்கியனின் பாட்டனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :