சுகாதார துறையினரின் பரிந்துரையை - அரசாங்க அதிபர் - இன்று கல்முனை பிரதேச செயலாளருக்கு மேலதிக நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளதை அடுத்தே இந்த விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
கல்முனை Lockdown விடயத்தை RDHS தன்னிச்சையாக கையாள்வதும் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
11 கிராம சேவகர் பிரிவுகள் தற்போது கல்முனையில் Lockdown..
ஆனால் , இவற்றில் கல்முனைக்குடி 1,2 மற்றும் கல்முனை 1,3 ஆகிய முஸ்லிம் பகுதிகள் மட்டுமே ( செய்லான் வீதி முதல் வாடி வீதி வரை) முடக்கப்பட்டுள்ளது.
ஏனைய 7 கிராம சேவகர் பிரிவுகளும் திறந்தே உள்ளன.
அரச நிவாரணம் - இந்த 11 பிரிவுகளுக்குமே வழங்கப்படவும் உள்ளது.
அரசாங்க அதிபரின் கடிதத்தில் 28.12.2020 முதல் 14 நாட்கள் Lockdown செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்முனை RDHS தொடர்பில் அண்மைக்காலமாக மக்கள் சந்தேகம் வெளிப்படுத்தி வருவதை - இந்த சம்பவம் உண்மைப்படுத்துவதாக அமைந்துள்ளது..
மேற்சொன்ன - மறைக்கப்பட்ட வீதி ஒருபக்கம் இருக்க - கல்முனைகுடி மற்றும் கிரீன்பீல்ட் பகுதிகளில் நேற்று (30) Antigen Test செய்து 15 பேருக்கு தொற்று என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment