வெளிவிவகார அமைச்சு பயணிகளுக்கு விடுத்த எச்சரிக்கை



MI.இர்ஷாத்-
லங்கை அல்லது வேறு எந்தவொரு மூன்றாம் நாட்டிற்கும் நுழைவு அனுமதி வழங்குவதற்காக கட்டணம் அல்லது எந்தவொரு நிதிக் கொடுப்பணவையும் கோரும் தனிநபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் உள்நுழையும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து இலங்கைப் பிரயாணிகளையும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு எச்சரிக்கையாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கின்றது.
இலங்கைக்குள் நுழைவதற்கோ அல்லது வெளியேறுவதற்கோ உரிய அங்கீகாரத்தை சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் தவிர, எந்தவொரு நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கம் அளிக்கவில்லை என வெளிநாட்டு அமைச்சு இதன்மூலம் அறிவிக்கின்றது.
நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் நோயாளர் தொகையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மீளழைத்து வருவதற்கான செயன்முறையானது, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தகுதியான நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அடிப்படையில் எதிர்வரும் வாரங்களில் மீண்டும் தொடங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலதிக மற்றும் உண்மையான தகவல்களுக்காக வெளிநாட்டில் வசிப்பவர்கள் உங்கள் அருகிலுள்ள இலங்கைத் தூதரகம் அல்லது இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அல்லது துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் தகவல்களை https://www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யவும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :