நஞ்சற்ற விவசாயம் தொடர்பில் விவசாயிகளை தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
ஞ்சற்ற விவசாயம் தொடர்பில் விவசாயிகளை தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்று (26) புல்மோட்டை கமநல சேவை நிலையத்தில் நடைபெற்றது.
நஞ்சற்ற விவசாயத்தின் தேவை இன்று உணரப்படுவதனால் அரசாங்கம் இத்துறைசார் உற்பத்திகளை மேம்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் அரச சார்பற்ற நிறுவனங்களும் அரசின் இணை அனுசரனையோடு இச்செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றன.

Peace winds Japan நிறுவனத்தின் அனுசரனையில் இவ்விழிப்புணர்வு வேலைத்திட்டம் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.ஜப்பான் நாட்டு அரசாங்கம் இதற்காக நிதியுதவியை வழங்குகின்றது.
விவசாயிகளை இயற்கை விவசாயத்தின்பால் ஈர்த்து அவர்களது உற்பத்திகளுக்கு சிறந்த சந்தைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதே இதன் மூல நோக்கமாகும் என்று peace winds Japan நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் வீ.ரமேஸ் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் சிறிய நீர்ப்பாசன குளங்கள் புனரமைப்பு உட்பட பல அபிவிருத்தி திட்டங்களை இந்நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :