பொதுஜன பெரமுன தலமையிலான அரசாங்கமே ஆட்சி செய்ய உள்ளனர் -விமலவீர


அப்ராஸ்-

திர்வரும் நாடளுமன்ற தேர்தலின் பின் பொதுஜன பெரமுன தலமையிலான அரசாங்கமே ஆட்சி செய்யவுள்ளனர் கடந்த காலத்தில் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் அதிகமாக சேவைகளை செய்தது மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமாகும்

என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் திகாமட்டுள்ள மாவட்ட வேடப்பாளரும் முன்னாள் வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார் .

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவின் கல்முனைக்கான இணைப்பாளர் எம்.வை.எம். நிப்ராஸ் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு (25) வியாழன் இரவு கல்முனையில் உள்ள அவரில் இல்லத்தில் இடம்பெற்றது இதன் போது மேலும்
முன்னாள் இராஜங்க அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்

கிழக்கு மாகாணத்தில் உள்ள பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டது எமது அரசாங்கத்திலாகும்.

நான் எப்போதும் உண்மையை பேசுபவன் நீங்கள் எங்களுக்கு வாக்களிப்பதன் மூலம் இன்னும் பல அபிவிருத்திகளையும் உங்கள் பிரதேசங்களில் பெற்றுக்கொள்ள முடியும் மேலும் கிழக்கு மாகாணத்தில் முன்னாள் அமைச்சராக இருந்து உங்களுக்கு நான் உங்களுக்கு பல சேவைகளை வழங்கியிருக்கிறேன் என்றார்.

இதன்போது பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னாள் இராஜங்க அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -