மாணவர்க்கு பாடசாலை இலவச சீருடைக்கூப்பன் வழங்கிவைப்பு


காரைதீவு நிருபர் சகா-

ம்மாந்துறை வலயத்தில் பயிலும் தரம் ஒன்று மாணவர்களுக்குரிய பாடசாலை சீருடைக் கூப்பன்கள் நேற்று வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீமினால் வழங்கி வைக்கப்பட்டன.
2020 இல் தரம் ஒன்றிற்குச் சேர்ந்த மாணவர்களுக்கான இலவச சீருடை கூப்பன் மற்றும் தரம் 01 மாணவர்களுக்கான செயற்பாட்டு நூல் என்பன அதிபர்களிடம் வழங்கிவைக்கப்பட்டன.

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் மற்றும் கல்வி முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக்கல்விப்பணிபபாளர் செல்வி வி. நிதர்சனி ஆகியோர்களினால் அதிபர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த பாடசாலை சீருடை கூப்பன்களை பொறுப்பான வகுப்பாசிரியர்கள் ஊடாக தரம் 1மாணவர்களது பெற்றோர்களை அழைத்து விநியோகிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -