பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பிற்கு எதிரான மனு மீது விசாரணை வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதிவரை உச்சநீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றபோது மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமிலுள்ள பிரீத்தி பத்மன் சுரசேன என்கிற நீதியரசர் விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த மனு விசாரணையில் சம்பந்தப்படுகின்ற ஞானசார தேரர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றபோது விசாரணைக்கு நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமை வகித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த மனுவை ஓகஸ்ட் வரை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
காணாமலாக்கப்பட்ட பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட மற்றும் மாற்றுக்கொள்கைக்கான நிலையம் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.