நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமுற்று டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கம்பளையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற வேணும் கொட்கலையிலிருந்து பொகவந்தலா நோக்கி சென்ற சிறிய ரக லொறியுமே 12/05 பிற்பகல் 03 மணியளவில் நோருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானது
விபத்தினால் லொறியின் சாரதியும் லொறியில் சென்ற மற்றொருவருமே காயமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வேணில் பயணித்த ஐவருக்கும் எவ்வித பாதிப்புகளும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்
அதிகவேகமாக சென்ற வேண் லொறியில் மோதுண்டுள்ளதாக தெரிவித்த அட்டன் பொலிஸார் வேணின் சாரதியை கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்