திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு என்ற இடத்தில் யானை தாக்குதலினால் பெண்னொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதுடன், தோப்பூர்,பள்ளிக்குடியிருப்பு ,தங்கபுரத்தைச் சேர்ந்த ப.அமராவதி (வயது -49) நான்கு பிள்ளைகளின் தாயார் என தெரிய வருகின்றது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த தோப்பூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூருல்லா குறித்த பெண்ணின் மரண விசாரணைகளை மேற் கொண்டார்.
இந்தப் பெண் ஆடு மேய்ப்பதற்காக தங்கபுரத்திற்கு சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக விசாரணை மூலம் அறிய முடிகின்றது.
இச் சம்வம் தொடர்பாக சம்பூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.