திருகோணமலை சம்பூரில் யானை தாக்கி பெண் ஒருவர் மரணம்


எம்.ஏ.முகமட்-
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு என்ற இடத்தில் யானை தாக்குதலினால் பெண்னொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதுடன், தோப்பூர்,பள்ளிக்குடியிருப்பு ,தங்கபுரத்தைச் சேர்ந்த ப.அமராவதி (வயது -49) நான்கு பிள்ளைகளின் தாயார் என தெரிய வருகின்றது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த தோப்பூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூருல்லா குறித்த பெண்ணின் மரண விசாரணைகளை மேற் கொண்டார்.
இந்தப் பெண் ஆடு மேய்ப்பதற்காக தங்கபுரத்திற்கு சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக விசாரணை மூலம் அறிய முடிகின்றது.

இச் சம்வம் தொடர்பாக சம்பூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -