எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா வைரஸின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாங்கேணி தோட்ட விவசாயிகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அந்தவகையில் மாங்கேணி பிரதேசத்துக்குட்பட்ட பசுமைக் கிராம விவசாயிகளின் கோரிக்கைக்கமைய முதல்கட்டமாக ஐம்பது (50) விவசாய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் செவ்வாய்க்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டது.
வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான க.கமலநேசனின் பிரதேச சபை மாதாந்த வேதனமும், தனது தனிப்பட்ட நிதியின் மூலமும் உலர் உணவு பொதிகளை நேரில் சென்று வழங்கினார்.
இதன்போது மாங்கேணி பிரதேச விவசாய சங்க பிரதிநிதிகள், வாழைச்சேனை பிரதேச இளைஞர்கள் சகிதம் கலந்து கொண்டு விவசாய குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
ஊரடங்கு சட்ட நடவடிக்கையினால் தங்களது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் நஷ்டத்தை எதிர்நோக்கியதால் பயிர்களை சரியாக பராமரிக்க முடியாமல் போனதாலும், விளைச்சல் குறைந்தாகவும், நோய்த்தாக்கம் அதிகமாக ஏற்பட்டதாகவும், அதனால் தங்கள் வாழ்கைக்கு உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காணப்பட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.