பட்டாசு கொளுத்தி தொல்லை கொடுத்து ஒருவரை தாக்கிய நால்வர் மீது பொலீஸ் விசாரணை.!

எச்.எம்.எம்.பர்ஸான்-

ட்டாசுகளை கொளுத்தி தொல்லை கொடுக்க வேண்டாம் எனக் கூறிய நபர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிலர் வீதியில் நின்று பட்டாசுகளை வெடிக்க வைக்கும் போது அது அயலவர் ஒருவரின் வீட்டுக்குள் வீழ்ந்து வெடித்துள்ளது. அதனையடுத்து அவ்வீட்டு உரிமையாளர் பட்டாசு கொளுத்தியவர்களிடம் கேட்கச் சென்றபோது அவ்விடத்தில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது தன்னை நால்வர் தாக்கியதாக வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -