திருகோணமலை-கந்தளாய் பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 70 குடும்பங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி இன்று(10)வைக்கப்பட்டது.
கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 70 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் அவர்களுடைய தனிமை படுத்தலுக்கான தினம் நிறைவுற்ற நிலையில் பொதுச்சுகாதார பரிசோதகர் அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளார்.
கந்தளாய் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளரான கடற்படை சிப்பாய் கொரோனா என உறுதிப்படுத்தப்பட்டதை யடுத்து அவருடன் தொடர்பு வைத்திருந்த நபர்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.