கிண்ணியா சிகையலங்கார உரிமையாளர்களுக்கான கொரோனா (கொவிட் -19) பரவுதை தடுத்தல் பற்றிய அறிவுறுத்தும் கூட்டம் நேற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜித் தலைமையில் நடைபெற்றது.
சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைய சிகையலங்கார கடைகள் நடத்தப்பட வேண்டும், தவறும் பட்சத்தில் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்தியதிகாரி இதன் போது தெரிவித்தார்.
சிகையலங்காரம் திறப்பதற்கான சுகாதார விதிமுறைகளுக்கு அமையும் கடை உரிமையாளர்களுக்கு சுகாதார சான்றிதழ்கள் வழங்கப் படும் என சுகாதார வைத்தியதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் 50க்கு மேற் பட்ட சிகையலங்கார உரிமையாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.