டொக்டர் என்.ஆரிப் சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கையில் முன்னெடுத்துச் செல்லப்படும் கொவிற் - 19 எனும் கொரணா வைரசு தொற்றுக்கான தடுப்பு நடவடிக்கை செயற்பாடுகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று உலக சுகாதார நிறுவனத்தின் அனுசரணையில் கொழும்பில் இடம்பெற்றது.

சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி டொக்டர் அனில் முனசிங்க தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் நாட்டிலுள்ள 26 பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவுகளுக்குமான பொறுப்பு வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில் நாட்டில் கொவிட்-19 தொற்று தொடர்பாக முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றது
.இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் பிரிவிற்குட்பட்ட தொற்றுநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆரிப் சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி டொக்டர் அனில் முனசிங்க அவர்களினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -