வைத்தியகலாநிதி சிவமோகன்
வடபிரதேசத்துக்கான கொரோனா நோயை அடையாளம் காணக்கூடிய ஒரே ஒரு உபகரணம் மட்டும் யாழ்ப்பாணம் நகரில் இயங்கத் தொடங்கியிருக்கின்றது அது நல்ல விடயமாக இருந்தாலும் திடீரென ஏற்படும் அசாதாரண சூழலை சமாளிக்கக் கூடிய அளவுக்கு வடபகுதியில் உள்ள முக்கிய வைத்தியசாலைகள் அனைத்திலும் பரி சோதனைக்கான வசதிகள் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும்
வைத்திய கலாநிதி சிவமோகன் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
பி.சி.ஆர் எனப்படும் உபகரணம்
மட்டுமே தற்பொழுது எமது நாட்டில் பாவனையில் உள்ளது இவற்றை அதிகப்படியாக கொள்வனவு செய்ய வேண்டிய அவசர நிலையில் இந்த அரசு உள்ளது
எனவே இதை மிக வேகமாக கொள்வனவு செய்யாதவிடத்து பெருந்தொகையான நோயாளிகள் அடையாளம் காணப்படாமல் கிராம ரீதியில் கைவிடப்பட்டு அவர்களிடமிருந்து தொற்றக்கள் பெருகுவதற்கும் ஒரே நேரத்தில் பாரிய அனர்த்தத்திற்கு எமது மக்கள் தள்ளப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்
சந்தேகத்திற்கு இடமான நோயாளிகளையும் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளையும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் பரிசோதனை செய்வதன் மூலமே கொரோனா நோயாளர்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கும்
சில சமயங்களில் அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும் பொழுது அந்த நபரிலிருந்து ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு
எனவே இந்த பாசோதனை கருவிகள் தான் கொரோனா நோயை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றும் தனிமைப்படுத்தல் மட்டும் இந்த நோயை ஒழிப்பதற்கு போதிய நடவடிக்கையாக அமையாது என்று வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்.
