ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய விதைகள் வழங்கல்

எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நாட்டின் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள பத்து இலட்சம் வீட்டுத் தோட்டத்தினை உருவாக்கும் 'சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்' அமைக்கும் பணிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாலைநகர் கிராமத்தில் அமைந்துள்ள இமாம் ஜஃபர் ஸாதிக் சமூக சேவைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வீட்டுத் தோட்டம் அமைத்தலும், விதைகள் வழங்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இமாம் ஜஃபர் ஸாதிக் சமூக சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எல்.ரீ.எம்.ஹலீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது தோட்டம் செய்யும் நபர்களுக்கு சௌபாக்கியா வீட்டுத் தோட்டத்திற்கான கத்தரி, மிளகாய், வெண்டி, போஞ்சி, பாகல் போன்ற ஐந்து வகை பயிர்களுக்கான விதைகள் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -