புணாணை கொரானா தடுப்பு முகாமிற்கு பொருட்கள் வழங்கி வைப்பு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ல்குடா கொவிட்-19 டாஸ்க் போர்ஸ் அமைப்பினால் மட்டக்களப்பு புணாணை மட்டக்களப்பு பல்கலை கழகத்தில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு முகாமில் உள்ள மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உலர் உணவு பொருட்கள் இன்று கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புணாணையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக உலர் உணவு பொருட்களும் அத்தியாவசிய பொருட்களும் கல்குடா கொவிட்-19 டாஸ்க் போர்ஸ் அமைப்பினால் முகாமில் உள்ள இராணுவத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கல்குடா கொவிட்-19 டாஸ்க் போர்ஸ் அமைப்பின் ஆலோசகரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான எம்.ரீ.எம்.றிஸ்வி,ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, வைத்தியர் எம்.ஐ.எம்.இல்ஹாம், ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் ஏ.சி.எம். நியாஸ், உலமா சபையின் கல்குடா கிளையின் செயலாளர் மௌலவி எம்.இஸ்ஸத், அதன் பொருளாலர் எமளலவி ஏ.இல்யாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கல்குடா கிளை, கல்குடா வைத்தியர்கள், பிரதேச செயலகங்கள், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள்;, ஓட்டமாவடி வர்த்தக சங்கங்கம்;, மற்றும் பிரதேச முக்கியஸ்த்தர்கள் ஆகியோரினால் இணைந்து உருவாக்கப்பட்டு இயங்கி வருவதே கல்குடா கொவிட்-19 டாஸ்க் போர்ஸ் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -