நாட்டுக்குள் நுழைய ஒருவருக்கு ஜனாதிபதி அனுமதி.


ஜே.எப்.காமிலா பேகம்-

MSC Magnifica என்ற கப்பலில் இன்று இலங்கை வந்தடையும் ,இலங்கையர் ஒருவருக்கு, இலங்கை நாட்டுக்குள் உள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.அநுர பண்டார ஹேரத் என்ற , இலங்கையர் ஒருவருக்கே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.குறித்த நபர் இக்கப்பலில் தொழில் புரிபவர்.கடந்த மாதம் உலகின் சில நாடுகளுக்கு சுற்றுலாவை தொடங்கிய இக்கப்பலானது ,கொரோனா பீதி காரணமாக பல நாடுகளில் தரித்து நிற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.இலங்கையில் 3மணி நேரம் நிறுத்தப்படும் சந்தர்ப்பம் கிடைத்ததால்.., இக்கப்பலில் பயணித்த குறித்த இலங்கையர் ஏற்கனவே ஜனாதிபதியிடம் ,அனுமதி கோரி இருந்தார்.குறித்த கப்பல் இலங்கை வந்த பின் ,இத்தாலியை நோக்கி செல்வதால்,தனக்கு பல்வேறு பிரச்சனைகளை முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக , அவ்விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.கப்பலில் இது வரை யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.சுமார் 2700 பேர்களுடனேயே இக்கப்பல் தொடர்ந்தும் பயணித்துள்ளது.இது இத்தாலி நாட்டு கப்பல் ஆகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -