ஓட்டமாவடியில் வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு.


எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி தபாலக வீதியில் அமைந்துள்ளது வர்த்தக நிலையங்கள் நான்கு இன்று (7) அதிகாலை 3.30 மணிக்கு இடைப்பட்ட நேரங்களில் திருடர்களினால் உடைக்கப்பட்டுள்ளன.

இருவர் முகங்களை மறைத்துக் கொண்டு வர்த்தக நிலையங்களை உடைக்கும் காட்சி வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.ரீ.வீ. கெமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த வர்த்த நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற வர்த்தக நிலையங்களை வாழைச்சேனை பொலிஸார் நேரில் சென்று பார்வையிட்டதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -