இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது
இன்றைய தினத்தில (2020.04.11) இதுவரையில் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 198 ஆகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதிசெய்துள்ளார்.
இன்றைய தினம் இதுவரையில் ஒரு நோயாளர் மாத்திரமே அடையாளங்காணப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (2020.04.10) இறுதியாக பதிவான 7 நோயாளர்களுள் 6 பேர் ஜாஎல பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவர்கள்.
கொரோனா வைரசு தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 54 பேர் இதுவரையில் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -