இந்த வைரஸ் வெடித்ததன் பின்னணியில் உள்ள கட்டுக்கதைகளையும் யதார்த்தத்தையும் அறிந்து கொள்வோம்.
பாதிக்கப்பட்டவர்களில் 97% பேர் மருந்து மற்றும் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு உயிர் வாழ்கின்றனர்.
கொரோனா விலங்கியல் ஆய்வுகளில் வைரஸ் குடும்பத்தில் உறுப்பினராக உள்ளார். உண்மையில் இது ஏற்கனவே மனிதர்களிடையே ஏற்பட்டுள்ளது மற்றும் மக்களுக்கு ஏற்படும் ஜலதோஷத்தில் 1/3 பங்கு இந்த வைரஸால் ஏற்படுகிறது.
அனைத்து விலங்குகள் மற்றும் பாலூட்டிகளின் உடலில் கொரோனா வைரஸ் உள்ளது.
சாதாரண சோப்பு நம் கைகளிலிருந்தும் உடலிலிருந்தும் கழுவ போதுமானது.
சுகாதார நிபுணர்களைத் தவிர பொதுமக்கள் முகமூடிகளை அணியத் தேவையில்லை. குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு எந்தவிதமான பாதகமான விளைவுகளும் ஏற்படாது.
5 வயதுக்கு குறைவான குழந்தைகள் கொரோனா நோய்த்தொற்றுக்கு (99.1%) அதிக நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிர்வாழும் வீதத்தைக் காட்டுகிறார்கள்.
மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல தொற்றுநோய்கள் உள்ளன, அவற்றில் ஒன்று டெங்கு, எனவே துல்லியமான மருந்து கிடைக்காததைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. மருத்துவம் அது உடலில் உருவாக்கும் விளைவைப் பொறுத்தது, காரணமான இனங்கள் அல்ல.
செல்லப்பிராணிகளைக் கொண்டவர்கள் வழக்கமான சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களில், அவர்களில் 15% பேருக்கு மட்டுமே ஐ.சி.யூ மற்றும் வென்டிலேட்டர்கள் தேவை.
கோவிட் 19 தொடர்பான தவறான அனுமானங்கள்
வெப்பமான காலநிலையில் பரவாது -
காலநிலைக்கு வைரஸில் எந்த விளைவும் இல்லை. ஈரப்பதம் வைரஸின் பரவல் வீதத்தை பாதிக்கலாம்.
இறைச்சி சாப்பிடுபவர்கள் வைரஸ் பாதிப்பு அதிகம்-
இறைச்சி சாப்பிடுவதால் வைரஸ் பரவுவதற்கு எந்த தொடர்பும் இல்லை. இதை சுத்தமாகவும் தண்ணீரிலும் சமைக்க வேண்டும்.
அதைத் தடுக்க நீர் குடிப்பது உதவுகிறது-
நீர் பொதுவாக உடலுக்கு வெளிநாட்டு துகள்களுக்கு எதிராக போராட ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இது ஒரு பொதுவான அறிக்கை.
இளைஞர்கள் பாதிக்கப்படுவதில்லை -
கொரோனா வயது அடிப்படையில் பரவாது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், பிற வியாதிகளுடன் வயதானவர்கள் பொதுவாக வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
கிராமப்புறங்களில் பரவுவதில்லை மற்றும் மாற்று மருந்துகளைப் பயன்படுத்தி குணப்படுத்த முடியும்-
கிராமப்புற நகர்ப்புறங்களில் வைரஸ் சமமாக பரவுகிறது. கொரோனாவை முழுமையாக குணப்படுத்த எந்த மருந்துகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸ் 60 வயதிற்கு மேற்பட்ட மக்களைக் குறைக்க சீனர்களால் பரவவில்லை.இவை அனைத்தும் போலி செய்திகள்.
ஒரு நபர் உமிழ்நீர், பாதிக்கப்பட்ட நபரின் வியர்வை ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ள வரும்போது வைரஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபர் கடக்கும்போது அது பரவாது.
முகமூடி அணிவதை விட கைகளை கழுவுவது முக்கியம். முகமூடிகளை அணிவதை விட, கைகளை கழுவுவது முற்றிலும் அவசியம்.
இஞ்சி, பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை உட்கொள்வது பொதுவாக நம் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் கொரோனாவை நோக்கி எந்த சிறப்பு தடுப்பு கூறுகளும் இல்லை. மேலும் மூல பூண்டு சாப்பிடுவது தொண்டையில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
வைரஸ் காற்று வழியாக பரவலாம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வைரஸைக் கண்டறிய சரியான சோதனைக் கிட் இருக்க வேண்டும், இல்லையெனில் அது தவறான முடிவுகளை ஏற்படுத்தும்.
வைரஸ் பரவுவதை விட, வைரஸ் தொடர்பான தவறான தகவல்கள் வேகமாக பரவுகின்றன.
வீட்டிலேயே நேர்மறையாகவும் பாதுகாப்பாகவும் இருப்போம், மேலும் கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான முதன்மையான படியாக இருக்கும் நமது தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுகிறோம்.
வைரஸ் வெடித்தது தொடர்பான தவறான அனுமானங்கள் பாதுகாப்பான மற்றும் பீதி குறைந்த சூழ்நிலைக்கு தவிர்க்கப்பட வேண்டும்.
டாக்டர் பவித்ரா வெங்கடகோபாலனின் நேர்காணலின் பதிப்பு!
- COVID-19 பாதிக்கப் பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு.
- 1950லேயே கண்டு பிடிக்கப் பட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸ். அவ்வளவே.
- இதற்கு முன்னும் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதர்களில் வரும் மூன்றில் ஒரு பங்கு சளிக் காய்ச்சலுக்கு கொரோனா வைரஸே காரணம்.
- எல்லா விலங்கிலும் கூட கொரோனா வைரஸ் இருக்கிறது.
-சாதாரண சோப்பில் கை கழுவினால் கூட போதுமானது.
- பொது ஜனத்திற்கு முகமூடிகள் தேவையில்லை. (சுகாதாரப் பராமரிப்பில் ஈடுபட்டவர்களுக்குத் தான் வேண்டும்). பாதிக்கப் பட்டவர்கள் சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
- குழந்தைகளிலும், கர்பிணிப் பெண்களிலும் பாதிப்பின் வீரியம் குறைவே.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் உயிர் பிழைக்கும் சதவிகிதம் மிக அதிகம் (99.1%).
- உலகில் மருந்து கண்டு பிடிக்க முடியாத பல வியாதிகள் இருக்கின்றன. குறிப்பாக டெங்கு. எனவே கொரோனாவிற்கு கூடுதல் அச்சம் தேவையில்லை.
- சிகிச்சை பாதிப்பைப் பொறுத்தது. நோயைப் பொறுத்தது அல்ல. எனவே நடைமுறையில் உள்ள சிகிச்சைகளே போதுமானது.
- நாய், பூனை, பறவைகள் வைத்திருப்பவர்கள் பொதுவான சுகாதாரத்தைப் பின்பற்றினாலே போதும். செல்லப் பிராணிகளுக்கு என்று குறிப்பாக பாதுகாப்பு எதுவும் தேவை இல்லை.
- பாதிக்கப் பட்டவர்களிலும் 15% மட்டுமே, ICU, Ventilator தேவைப் படுகிறது.
- பதற்றம் தேவையே இல்லை.
புரளி நம்பர் 1 - வெய்யிலில் வராது.
வெய்யிலில் கண்டிப்பாக வரும். வெய்யிலில் காற்றில் ஈரத்தன்மை சற்று அதிகம் இருக்கும். எனவே, பரவும் வேகம் குறைவாக இருக்கலாம். குளிர் காலத்தில் காற்று சற்று காய்ந்து இருக்கும். பரவுதல் சற்று எளிது. அதுவே வித்தியாசம்.
புரளி நம்பர் 2 - மாமிசம் தின்றால் வரும்.
ரசத்திலிருந்து மட்டன் பிரியாணி வரை எதை வேண்டுமானாலும் உண்ணலாம். எதைத் தின்றாலும் சுத்தமான தண்ணீரில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமைத்த உணவில் வைரஸ் பிழைக்காது.
புரளி நம்பர் 3 - நிறைய தண்ணீர் குடிச்சா வராது.
தேவையான தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. எந்த நோயையும் எதிர்த்துப் போராடுவதற்கு உடலுக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது. மற்றபடி, கொரோனா தாக்குதலுக்கும், தண்ணீர் குடிப்பதற்கும் தொடர்பு இல்லை.
புரளி நம்பர் 4 - இளவயதினருக்கு வராது.
- வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்கும், ஆனால் வயதானவர்களிலும், மற்ற உடல் உபாதைகள் சேர்ந்திருப்பவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் பாதிப்பு அதிகம். (குறிப்பாக, Diabetes, HBP, Transplant candidates, Cancer patients etc.,)
புரளி நம்பர் 5 - கிராமங்களில் வராது.
காற்று இருக்கும் எல்லா இடங்களிலும் பரவும். நகரம் கிராமம் எல்லாம் கொரோனாவிற்கு தெரியாது.
புரளி நம்பர் 6 - மாற்று மருந்துகளில் குணமாகும்.
பரிசோதிக்கப் பட்ட எந்த மருந்தும் எந்த மருத்துவத்திலும் இன்று வரை புதிய கொரோனாவிற்கு கிடையாது. எந்த மருந்தும் சந்தைக்கு வருவதற்கு முன், நோயைக் கட்டுப் படுத்தும் அதன் தன்மைக்காகவும், அது பாதுகாப்பானதா என்பதற்காகவும் சோதனை செய்யப்பட்ட பிறகே பரிந்துரைக்கப்படும். கொரோனாவிற்கு அப்படி ஒரு மருந்து வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். எனவே அறிகுறிகள் இருந்தால், நிச்சயம் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரைப் பாருங்கள். உயிரிழப்பைத் தவிருங்கள்.
புரளி நம்பர் 7 - அறுபது வயதிற்கு மேற்பட்ட சீனர்களை முடித்துக் கட்ட சீனா உருவாக்கிய வைரஸ்.
இது அறிவியல் கூடத்தில் உருவாக்கப் பட்ட வைரஸ் அல்ல. GENOME SEQUENCE கொண்டு விலங்கிடமிருந்து எந்த நாளில் மனிதனுக்கு கடத்தப் பட்டது என்பது வரை மிகத் தெளிவாக ஆராய்ந்து கண்டு பிடித்து விட்டார்கள்.
புரளி நம்பர் 8 –
கொரோனா வைரஸ் இருப்பவர்கள் கடந்து போனாலே நமக்கும் வந்து விடும்.
. நம் மேல் இருமினாலோ, தும்மினாலோ, அவர்களின் எச்சில் விரவி இருக்கும் காற்றை நாம் சுவாசித்தாலோ தான் நம்மைத் தாக்கும். அவர்களின் எச்சில் பட்டு ஒரு இடம் காய்ந்து விட்டால், அந்த இடத்தை நாம் தொட்டாலும் வராது.
அறியாமை நம்பர் 1. - முகமூடி அணிந்து விட்டால் கை கூட கழுவ வேண்டாம்.
முதலில் முகமூடி அணியத் தேவையில்லை. அணிந்தால் சரியாக அணிய வேண்டும். அணிந்தாலும் 4-6 மணி நேரங்களுக்கு ஒரு முறை புதிய முகமூடி அணிய வேண்டும். ஒரு வேளை அதற்கு முன் maskஐ வெளிப்புறமாக வடிகட்டியில் தொட்டு விட்டால் தூக்கி எறிந்து விட்டு புதிய mask அணிய வேண்டும். Mask அணிந்தாலும் கை கழுவ வேண்டும்.
அறியாமை நம்பர் 2.
பூண்டு, இஞ்சி, மிளகு சாப்பிட்டால் வராது.இவற்றையெல்லாம் சாப்பிட்டாலும் கொரோனா வைரஸ் வரும். மேலும், பூண்டு நிறைய rawவாக சாப்பிட்டால் தொண்டையில் inflammation வரும். எச்சரிக்கை. Magicஆன எந்த காய்கறிகளும், பழங்களும் இல்லை.
கொரோனா வைரஸ்க்கு பயப்பட வேண்டுமா ?
- புது வைரஸ். பின்னால் வருத்தப் படுவதை விட இப்பொழுது பாதுகாப்பாக இருப்பது நல்லது.
- காற்றில் பரவும் வைரஸ். குறைந்த நேரடித் தொடர்பினால் கட்டுப் படுத்த வாய்ப்புகள் அதிகம்.
- ஒருவர் 2 மீட்டர் தூரத்திற்கு ஒன்றிலிருந்து மூன்று பேர் வரை ஒரே சமயத்தில் பரப்ப முடியும்.
- பாதிக்கப் பட்டவர்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் பரவலின் வீரியத்தைக் குறைக்க முடியும்.
- தங்களுக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை தனிநபரால் தெரிந்து கொள்ள முடியாது.
- பரிசோதிப்பதற்கு Proper Test Kit வேண்டும். Inaccurate test kit. Inaccurate results.
ஏன் இவ்வளவு பதற்றம்?
புது வைரஸ். பரவும் வேகம் அதிகம். மேலும் கடந்த காலங்களை விட நாம் பயணிப்பதும், பொதுவில் ஒன்று கூடுவதும் அதிகமாகி விட்டது. சமூக வலை தளங்கள். 99.5% புரளிப் பரிமாற்றங்கள்.
என்ன செய்ய வேண்டும்?
1. தனிப்பட்ட சுகாதாரம். முடிந்த வரை அடிக்கடி கை கழுவுங்கள். குறைந்த பட்சமாக சாப்பாட்டிற்கு முன், பின். கழிவறைக்கு முன், பின், வெளியில் இருந்து வந்தால், அழுக்கான இடங்களைத் தொட்டால். இது அனைத்தும் பொதுவாகவே நமக்கு கற்று கொடுக்கப் பட்ட விஷயங்கள் தான். கொரோனா special இல்லை.
2. கூட்டம் தவிருங்கள்.
முக்கியமாக எதை செய்யக் கூடாது. வதந்திகளை பரப்பாதீர்கள்.
2006 - 2012 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அரிசோனா பல்கலை கழகத்தில் கொரோனா வைரஸ் குறித்து பிஎச்டி செய்த டாக்டர் பவித்ரா வெங்கடகோபாலன்
