பெரியநீலாவணை புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலயத்தில் ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபா செலவில், கிழக்கு ஆளுநரால் வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு !!


நூருல் ஹுதா உமர்-
கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை கல்வி வலய மருதமுனை கமு/ புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலய வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (28) பகல் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.எம். முஹம்மட் நியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,
சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுள் நஜீம் ஆகியோர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டனர்.

மேலும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் சங்கத்தினர் , பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -