கொரோனா வைரசால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் குடித்த நோய்க்கு கோவிட் 19 ( COVID-19) என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரிட்டுள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரேயேசஸ் கூறும்போது:-
புதிய நோய்க்கு கோவிட்-19' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தப் பெயர் பூமியில் எந்தவொரு இடத்துக்கோ, மிருகத்துக்கோ, தனிநபருக்கோ, குழுவுக்கோ இதுவரை வைக்கப்படவில்லையென்றும் , அதேவேளையில் உச்சரிக்கக் கூடியதாகவும், நோய்க்கு தொடர்புடையதாகவும் இந்தப் பெயர் உள்ளதாகவும், சி, ஓ,வி, ஐ, டீ ( C ,O ,V ,I ,D ) என்ற இந்தப் பெயரில் சி ஓ ( C ,O ) என்பது கொரோனா என்ற வார்த்தையையும், வி ஐ ( V,I ) என்பது வைரஸ் என்ற வார்த்தையையும், டீ ( D ) என்பது டிசீஸ் ( Disease ) எனப்படும் நோய் என்ற வார்த்தையையும் குறிப்பதாகவும், கொரோனா வைரஸை தவறான பெயர்களைக் கொண்டு குறிப்பதைத் தடுக்கும் விதமாகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என கூறினார்.