எங்களுக்கு தலைவர் பிரபாகரனும் சம்பந்தனும் தான்-மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்


பாறுக் ஷிஹான்-
ங்களுக்கு தலைவர் எவரும் சபையில் இல்லை எனவும் தலைவர்கள் என்றால் பிரபாகரனும் சம்பந்தனும் தான் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்ட அமர்வு வியாழக்கிழமை(28) கல்முனை நகர மண்டபத்தில் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

அண்மையில் சபையில் பாதீடு நிறைவேற்றப்பட்ட பின்னர் அது தொடர்பில் முன் எடுத்துக்கொள்ளப்பட்ட கூட்டறிக்கை தொடர்பாக உறுப்பினர்களிடையே இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களிடையே முதல்வர் தெரிவித்த கருத்திற்கு மறுதலித்து பேசிய மாநகர சபை உறுப்பினர் எங்களுக்கு இங்கு தலைவர் எவரும் இல்லை .தலைவர் என்று சொன்னால் பிரபாகரன் மற்றும் சம்பந்தனும் தான்.முதல்வரே இங்கு சபைக்கு எவரும் எங்களுக்கு தலைவர் கிடையாது என கூற விரும்புகின்றேன் என குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -