காரைதீவு சகா-
இந்தியா தமிழ்நாட்டின் பிரபல கவிஞரும்எழுத்தாளருமான உடையார் கோயில் குணா விடுத்த அழைப்பையேற்று காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸண்பிள்ளை ஜெயசிறில் இந்தியா சென்றிருந்தவேளை அங்கு இடம்பெற்ற மாமன்னன் இராஜராஜ சோழனின் 1034 ஆம் ஆண்டு சதயவிழாவிலும் அவர் கலந்துகொண்டார். அங்குஅவருக்கு பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
உலகெங்கும் திருவள்ளுவர்சிலை நிறுவும் பணியை மேற்கொண்டுவரும் தமிழகம் உடையார்கோயில் குணா இலங்கையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் பெப்ருவரிமாதம் திருவள்ளுவர்சிலையை நிறுவி திறந்துவைக்கவிருக்கிறார்.
அத்தருணம் காரைதீவு பிரதேசசைபத்தவிசாளர் கே.ஜெயசிறிலின் வேண்டுகோளையேற்று காரைதீவிலும் திருவள்ளுவர்சிலை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று(9)சனிக்கிழமை காலை திருவள்ளுவர்சிலையை கவிஞர் குணாவின் வீட்டில்பார்வையிடுவதையும்அங்கும் அவருக்கு கௌரவமளிக்கப்படுவதையும்காணலாம்.