காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கு இந்தியாவில் கௌரவம்!



காரைதீவு சகா-

ந்தியா தமிழ்நாட்டின் பிரபல கவிஞரும்எழுத்தாளருமான உடையார் கோயில் குணா விடுத்த அழைப்பையேற்று காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸண்பிள்ளை ஜெயசிறில் இந்தியா சென்றிருந்தவேளை அங்கு இடம்பெற்ற மாமன்னன் இராஜராஜ சோழனின் 1034 ஆம் ஆண்டு சதயவிழாவிலும் அவர் கலந்துகொண்டார். அங்குஅவருக்கு பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

உலகெங்கும் திருவள்ளுவர்சிலை நிறுவும் பணியை மேற்கொண்டுவரும் தமிழகம் உடையார்கோயில் குணா இலங்கையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் பெப்ருவரிமாதம் திருவள்ளுவர்சிலையை நிறுவி திறந்துவைக்கவிருக்கிறார்.

அத்தருணம் காரைதீவு பிரதேசசைபத்தவிசாளர் கே.ஜெயசிறிலின் வேண்டுகோளையேற்று காரைதீவிலும் திருவள்ளுவர்சிலை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று(9)சனிக்கிழமை காலை திருவள்ளுவர்சிலையை கவிஞர் குணாவின் வீட்டில்பார்வையிடுவதையும்அங்கும் அவருக்கு கௌரவமளிக்கப்படுவதையும்காணலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -