CWF கத்தார் அமைப்பின் அங்கத்தவர்களுக்கும் கத்தாருக்கான இலங்கை தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு


தன் போது CWF Qatar அமைப்பு மேற்கொண்டு வரும் செயற்திட்டங்கள் குறித்தும் எதிர் வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் செயற்திட்டங்கள் குறித்தும் CWF Qatar அமைப்பின் தலைவர் முஹமட் அக்ரம் இலங்கை தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்.

அதனையடுத்து அண்மைக் காலங்களாக கத்தாரில் இடம்பெற்று வரும் இலங்கையர்களது திடீர்
மரணங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் அவ்வாறு திடீர் மரணங்கள் நிகழுமிடத்து CWF Qatar அமைப்பு எவ்வாறு இதனை கையாளுகின்றது என்பது குறித்தும் CWF Qatar அமைப்பின் தலைவர் இலங்கை தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்.

இதன் போது கருத்து தெரிவித்த இலங்கை தூதுவர் கித்சிரி அதுலத்முதலி.....

இவ்வாறான திடீர் மரணங்களுக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும் என்றும் இதற்கு CWF Qatar அமைப்பின் உதவி மிகவும் அவசியம் என்றும் வழியுருத்தினார். மேலும் இவ்வாறான நிலைமை குறித்து கூடிய கவனம் செலுத்துவதாகவும் இவ்வாறான நிலைமைகளை கண்டறிவதற்கு மருத்துவ முகாம்கள் நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் CWF Qatar அமைப்பு மேற்கொள்ளும் சகல முயற்சிகளுக்கும் நானும் எனது தூதரக அதிகாரிகளும் துணை நிற்போம் என கத்தாருக்கான இலங்கை தூதுவர் கித்சிரி அதுலத்முதலி தெரிவித்தார்.

கத்தாரில் இருந்து முஸாதிக் முஜீப்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -