ஹெரோயின் போதைப்பொருடன் கைதுசெய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்..

புத்தளம் வீதியில் தோனிகல பகுதியில் வைத்து ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த போதைபொருளுடன் ஓட்டோவில் பயணித்த நிலையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருவலகஸ்வெவ பிரதேச சபையின் உறுப்பினரான 28 வயதுடைய குறித்த சந்தேக நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த நபரை ஓகஸ்ட் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஆனமடுவ நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -