தந்தை மகள் ரயிலில் மோதி பலி - வெயாங்கொடையில் சம்பவம்

ஐ. ஏ. காதிர் கான்-

வெயாங்கொடை, வந்துரவ பகுதியில் உள்ள ரயில் கடவையில், மோட்டார் சைக்கிளில்

சென்ற தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.
நேற்று (15) திங்கட்கிழமை காலை 6.45 மணியளவில் வெயாங்கொடை, வந்துரவ ரயில் கடவை வழியாகப் பயணித்த தந்தையும் (45) அவரது மகளுமே (11) இவ்வாறு பலியாகியுள்ளனர் என வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மோட்டார் சைக்கிள், காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு - கோட்டையை நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இருவரும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக, வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்தார்.
இரு சடலங்களும், வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான விசாரணைகளை வெயாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -