ஊடகவியலாளர்கள் சமூக வீரர்கள் - வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி

பாறுக் ஷிஹான்-
ட மாகாண பொலிஸாருக்கு ஊடகவியலாளர்களாகிய சமூக வீரர்களின் ஒத்துழைப்பு அவசியமானது என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜயகுணவர்த்தன இன்றைய தினம்(27) காங்கேசந்துறை சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் வடக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதிப் பொலீஸ் மா அதிபராக உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தனது கருத்தில் ஊடகவியலாளர் ஒத்துழைப்புடனே சமூக சீர்கேடுகள் போதைப்பொருள் பாவனைகள் போன்றவற்றை இல்லாமல் ஒழிப்பதோடு பொலிஸாருக்கு தமது கடமையில் பூரண சுதந்திரத்துடன் உண்மையாக செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
இப்பதவியேற்பு வைபவத்தில் வடக்கு மாகாணத்திலுள்ள மன்னார் கிளிநொச்சி முல்லைதீவு வவுனியா யாழ்ப்பாணம் உள்ளிட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரதிப்பொலிஸ் மா அதிபர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சர்வ மத குருமாரின் ஆசிர்வாதத்துடன் குறித்த பதவியேற்பு வைபவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -