தேசிய அடையாள அட்டை பெறுவதில் பெரும்பாலான ஆர்வம்


காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை யில் ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைக்கானவிண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இதே போன்று அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்குமான விண்ணப்பங்களும் பொறுப்பேற்கப்படும்.
அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் அடிப்படையில் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் ஒரு நாள் சேவையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அவசியம் திணைக்களத்திற்கு சமூகம் அளிக்க வேண்டும் என்று ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்பொழுது நாடு முழுவதிலும் உள்ள பிரதேச செயலகங்கள் அமைக்கப்பட்டுள்ள 331 கிளை அலுவலகங்கள் மூலம் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகள், அதிபர் அல்லது பிரிவெனாக்களை சேர்ந்த தலைமை அதிகாரிகள் மூலமும் தோட்ட அதிகாரிகள் மூலமும் இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

அனைத்து கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மூலமும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். சம்பந்தப்பட்ட தகவல் ஆலோசனை திணைக்களத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் கட்டளைகள் தொடர்பிலான உறுதி செய்யும் அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -