வழங்கப்பட்ட கப்பல் ஹவாயிலிருந்து 42 நாட்கள் கடற்பயணத்தை முடித்து மே 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பை வந்தடைந்தது. 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 27ஆம்;திகதி ஹவாய் ஹொனலுலுவில் நடைபெற்ற நிகழ்வில் இந்தக் கப்பல் இலங்கை கடற்படையிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
'அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத் திய இந்தக் கப்பல் இறைமைமிக்க இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அமைதியை பாதுகாக்கும்,' என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிஸ்ட தெரிவித் தார். 'இந்து-பசுபிக் பிராந்தியமானது சகல நாடுகளுக்கும் சுதந்திரமாகவும், திறந்ததாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கப்பலானது இலங்கைக்கு வழங்கப்பட்ட அமெரிக்க கரையோரப் பாதுகாப்புப்பிரிவின் இரண்டாவது கப்பல் என்பதுடன், 115 மீற்றர் நீளத்தைக் கொண்ட இந்தக் கப்பலே இலங்கை கடற்படையிடமுள்ள நீளமான கப்பலாகும். கப்டன் ரோஹித அபேசிங்க, 22 கப்பற் குழுவினர் மற்றும் 111 மாலுமிகளுடன் வந்தடைந்த இக்கப்பலை கடற்படைத் தளபதி வைஸ்அட்மிரல் பியல் டி சில்வா, கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படைத் தலைமையகம், கடற்படை மேல்மாகாண கட்டளைத் தலைமையகத்தின் முக்கியஸ்தர்கள் வரவேற்றனர். கப்பல் வந்தடைந்ததும் ;சிரேஷ்ட அதிகாரிகள் கப்பலை மேற்பார்வையிட்டனர். ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவின் ஆணையைப் பெற்ற பின்னர் இந்தக்கப்பலுக்கு இலங்கைப் பெயர் சூட்டப்படும்.
இந்தப் புதிய கப்பலானது இலங்கையைச் சுற்றியுள்ள ஆழ்கடல் பகுதியில் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப் படவிருப்பதுடன், தேடுதல்கள் மற்றும் மீட்புப் பணிகளுக்கும்
இது உதவி வழங்கும். இந்து-பசுபிக் பிராந்தியமானது சகல நாடுகளுக்கும் சுதந்திரமாகவும், திறந்ததாகவும் இருக்கவேண்டும ; என்பதை ஊக்குவிக்கும் இலங்கை மற்றும் அதன் பங்காளி நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவியாகவிருக்கும்.