முதல் முதலில் கிழக்கிலங்கையில் ERCP சத்திர சிகிச்சை

  அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சமீம் உள்ளிட்ட டாக்டர் குழுவினரால் நடைபெற்றது
எஸ்.அஷ்ரப்கான்-
கிழக்கிலங்கையில் ERCP சத்திர சிகிச்சை முதல் முதலில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சமீம் உள்ளிட்ட டாக்டர் குழுவினரால் நேற்று (01) நடைபெற்றது.

ERCP என்பது Endoscopic retrograde cholangiopancreatography அதாவது Endoscopy, Fluoroscopy மூலம் பித்தப்பைக் குழாய் சதையிக் குழாயில் காணப்படும் பிரச்சினைகளைக் கண்டுபிடிப்பதற்கும் சிகிச்சை வழங்குவதற்குமான சிகிச்சை முறையாகும்.
பித்தப்பைக் குழாயில் பித்தப்பைக் கல் அடைப்பு மற்று சதையியின் தலைப் பகுதியிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நமது பகுதி நோயாளிகள் கொழும்பு,களுபோவில, ராகம வைத்தியசாலைகளுக்கு அனுப்பப் படுவததைக் குறைப்பதற்காகவே கல்முனை AMH வைத்தியசாலையில் ERCP எனும் சத்திர சிகிச்சை முறை வெற்றிகரமாக இன்று நடைபெற்றது.

பித்தப்பைக் குழாயில் பித்தப்பைக் கல் அடைபட்டு கண் மஞ்சளாகி வந்த நோயாளி ஒருவருக்கே இவ் அரும் பெரும் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு வெற்றியாக நிறைவேறியது.
இனிவரும் காலங்களில் தொடர்ந்தும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ERCP சத்திர சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும்இச் சத்திர சிகிச்சையை இங்கு மேற்கொள்ள பெறுமதி வாய்ந்த உபகரணங்களைப் பெற்றுத்தந்த வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். றஹ்மான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சமீம் உள்ளிட்ட டாக்டர் குழுவினர் தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -