ஜேர்மன் நியூரம்பேர்க் நகர சர்வதேச நட்புறவுத் திணைக்களத் தூதுக்குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது ஹெய்ன்றிச் சுகாதார நிலையத்திற்கு விஜயம் செய்து, பார்வையிட்டதுடன் அதன் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
ஜேர்மன் நியூரம்பேர்க் நகராட்சியின் சர்வதேச நட்புறவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் நோர்பெர்ட் செஹுஜர்ஸ் அம்மையார் தலைமையிலான குழுவில் அதன் நியூரம்பேர்க் சர்வதேச தொடர்பாடல் அதிகாரிகள் மூவருடன் இலங்கைக்கான தொழில்நுட்ப ஆலோசகர் டாக்டர் பாமி இஸ்மாயில் உள்ளிட்டோரும் இவ்விஜயத்தில் பங்கேற்றிருந்தனர்.
இவர்களுடனான சந்திப்பில் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.ஜௌபர், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.அஜ்வத் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது சாய்ந்தமருது ஹெய்ன்றிச் சுகாதார நிலையத்தில் இடம்பெறும் சேவைகளைப் பார்வையிட்ட இத்தூதுக்குழுவினர், அங்கு நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டனர். இந்நிலையத்தில் மக்களுக்கான சேவைகளை மேலும் விஸ்தரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர்கள் அதற்கு வேண்டிய உதவிகளை வழங்குவதற்கு தமது நட்புறவு திணைக்களம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
அதேவேளை கல்முனைப் பிராந்திய இளைஞர், யுவதிகளின் நலன் கருதி இப்பகுதியில் அனைத்து வசதிகளையும் கொண்ட தொழில் பயிற்சி நிலையமொன்றை அமைப்பதற்கு நியூரம்பேர்க் நகர சர்வதேச நட்புறவுத் திணைக்களம் உதவ முன்வர வேண்டும் என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள் முன்வைத்த வேண்டுகோளை அத்திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் நோர்பெர்ட் செஹுஜர்ஸ் ஏற்றுக்கொண்டதுடன் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை அவசரமாக முன்னெடுப்பதற்கான ஆர்வத்தையும் வெளிக்காட்டியுள்ளார்.
இச்சந்திப்பின் இறுதியில் நியூரம்பேர்க் தூதுக்குழுவினருக்கு கல்முனை மாநகர முதல்வர் றகீப் அவர்கள் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
இதன்போது சாய்ந்தமருது ஹெய்ன்றிச் சுகாதார நிலையத்தில் இடம்பெறும் சேவைகளைப் பார்வையிட்ட இத்தூதுக்குழுவினர், அங்கு நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டனர். இந்நிலையத்தில் மக்களுக்கான சேவைகளை மேலும் விஸ்தரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர்கள் அதற்கு வேண்டிய உதவிகளை வழங்குவதற்கு தமது நட்புறவு திணைக்களம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
அதேவேளை கல்முனைப் பிராந்திய இளைஞர், யுவதிகளின் நலன் கருதி இப்பகுதியில் அனைத்து வசதிகளையும் கொண்ட தொழில் பயிற்சி நிலையமொன்றை அமைப்பதற்கு நியூரம்பேர்க் நகர சர்வதேச நட்புறவுத் திணைக்களம் உதவ முன்வர வேண்டும் என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள் முன்வைத்த வேண்டுகோளை அத்திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் நோர்பெர்ட் செஹுஜர்ஸ் ஏற்றுக்கொண்டதுடன் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை அவசரமாக முன்னெடுப்பதற்கான ஆர்வத்தையும் வெளிக்காட்டியுள்ளார்.
இச்சந்திப்பின் இறுதியில் நியூரம்பேர்க் தூதுக்குழுவினருக்கு கல்முனை மாநகர முதல்வர் றகீப் அவர்கள் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.