அஸ்லம் எஸ்.மௌலானா-கல்முனை நகர மண்டபத்தை பொது மக்களின் பாவனைக்கு வழங்குவதற்கு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இன்று தொடக்கம் கருத்தரங்குகள், கூட்டங்கள் உட்பட பொது நிகழ்வுகளுக்காக இந்த நகர மண்டபம் கல்முனை மாநகர சபையினால் வாடகைக்கு வழங்கப்படும்.
இதற்காக மாநகர சபையின் கணக்காளர் ஊடாக மாநகர ஆணையாளரின் அனுமதியை முன்கூட்டி பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக இந்த நகர மண்டபம் ஒரு தனியார் நிறுவனத்தின் பாவனைக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கல்முனை மாநகர முதல்வராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் பதவியேற்றத்தைத் தொடர்ந்து பொது மக்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில் அந்நிறுவனத்திடமிருந்து நகர மண்டபம் மீளப் பெறப்பட்டு, குறித்த கால அவகாசத்தில் அது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -