அமைச்சர் ரிஷாத் வாழ்த்துகிறார்




க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

மாணவர்களாகிய உங்களின் இந்த வெற்றிக்கு நீங்கள் மேற்கொண்ட அயரா முயற்சிகள் மாத்திரமின்றி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் அபரிமிதமானது கலந்துள்ளது. அந்தவகையில், மாணவர்களாகிய உங்களின் உயர்ச்சியில் பங்களிப்பு நல்கிய ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், பாராட்டுகின்றேன்.

கல்விக்கான முதற்படியை தாண்டி உயர்கல்வியில் கால்வைக்கின்றீர்கள்.எனவே எதிர்காலத்தை நன்கு திட்டமிட்டு செயற்படுத்துங்கள்.
பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாதவர்கள் மனம் தளர வேண்டிய அவசியமில்லை. இது ஒரு பரீட்சை மாத்திரமே எனவே மனஞ் சோராது மீண்டும் முயற்சி செய்து பரீட்சையில் வெற்றிபேறுங்கள்.

ரிஷாத் பதியுதீன்,
கைத்தொழில், வர்த்தகம்,நீண்ட காலம்
இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும்
கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும்
தொழில் பயிற்சி அமைச்சர் அமைச்சர்.
தலைவர் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -