நாவலப்பிட்டி முஹமது ஜவ்பர் ஷம்லா 9 ஏ சித்தி


ஜே.எப்.காமிலா பேகம்-
நாவலப்பிட்டி சென் மேரிஸ் பாடசாலை மாணவி முஹமது ஜவ்பர் ஸம்லா க.பொ.த. உயர்தர பரீட்சையில் 9A சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். பாடசாலையில் சகல பாடங்களிலும் சிறந்த புள்ளிகளையே தொடர்ந்தும் பெற்று வந்துள்ளார்.மிகவும் வறுமையான வசதி குறைந்த குடும்பத்தில் பிறந்த இந்த மாணவி பல கஸ்டங்களுக்கு மத்தியிலேயே தனது கல்வியை தொடர்ந்துள்ளார்.எனினும் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் , பெற்றோர் தந்த ஆதரவும், எல்லாம் வல்ல இறைவனின் நாட்டமுமே, தான் இந்த பெறுபேரை பெற்றுக்கொள்ள வழிவகுத்தது என்றும் அதற்காக அனைவருக்கும் நன்றி கூற கடமைபட்டுள்ளதாகவும் கூறும் ஸம்லா என்ற இந்த மாணவி எதிர்காலத்தில் சிறந்த வைத்திய நிபுணராக வர வேண்டும் என்பதை தனது இலட்சியம் எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -