ஊடகவியலாளரை அச்சுறுத்திய சந்தேக நபர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதிப்பு


எஸ்.அஷ்ரப்கான்-
டகவியலாளர் ஒருவரை அச்சுறுத்திய வழக்கில் முஸ்லிம் அரசியல் கட்சி ஒன்றின் செயற்பாட்டாளரான அப்துல் அஸீஸ் முஹமட் அஷாம் என்பவர் வெளிநாடு செல்வதற்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று (30) செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.
கல்முனையைச் சேர்ந்த ஊடகவியலாளரான முஹமட் இப்ராஹிம் என்பவரை கடந்த 26 ஆம் திகதி நள்ளிரவில் தொடர்ந்தேச்சையாக தொலைபேசியில் தகாத வார்த்தைகளால் இவர் பேசினார் என்று கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வழக்கு அழைக்கப்பட்டபோது முறைப்பாட்டாளரான ஊடகவியலாளரை ஆதரித்து சட்டத்தரணிகளான ஏ. ஜி. பிறேம் நவாத், அனோஜ் பிருதர்ஸ் ஆகியோர் ஆஜராகி நீதிமன்றம் சந்தேக நபருக்கு அழைப்பாணை விடுப்பதுடன் அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முடியாதவாறு தடை போட வேண்டும் என்றும் கோரினர்.
இதை அடுத்து இச்சந்தேக நபரை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு கல்முனை நீதிவான் ஐ. என். ரிஸ்பான் உத்தரவிட்டதுடன் சந்தேக நபர் எதிர்வரும் டிசெம்பர்- 04 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை பிறப்பித்தார்.
நீதிமன்ற உத்தரவு கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸார் மூலமாக குடிவரவு மற்றும் குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸாரின் சார்பில் பொலிஸ் சார்ஜன் அப்துல் ஹை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -