உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ்வை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் சனிக்கிழமை (20) காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
அன்மையில் சவூதி அரேபியாவின் மக்கா நகரில் இடம்பெற்ற உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபையின் 43 ஆவது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நாடு திரும்பிய நிலையில் இராஜாங்க அமைச்சருக்கு இக் கெளரவம் காத்தான்குடி மக்களால் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், உலமாக்கள் என பலரும் இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் .ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும் வழங்கி கெளரவித்ததுடன் இப் பாராட்டு நிகழ்வில் அதிகளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.