திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவை சேர்ந்த திருமதி ரோஹினா மஹரூப் இன்று (11) அகில இலங்கை சமாதான நீதவானுக்கான கடிதத்தை சிறிகொத்தாவில் வைத்து பெற்றுக் கொண்டார்.
கிண்ணியாவை பிறப்பிடமாகக் கொண்ட ரோஹினா மஹரூப் சமூக மறுமலர்ச்சிக்கான பெண்கள் அமைப்பின் தலைவியாகவும், சமூக சேவையாளருமாக செயற்பட்டு வருகிறார். முன்னால் கப்பல் துறை இராஜாங்க அமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மர்ஹூம் எம்.ஈ.எச்.எம். மஹ்ரூப் அவர்களின் புதல்வியுமாவார்.
கம்பஹா, களுத்துறை, கொழும்பு போன்ற மாவட்டங்களை சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்திகழ்வில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள, மகளிர் , சிறுவர் விவகார அமைச்சர்களான திருமதி.சந்ராணி பண்டார , அனோமா கமகே, மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கோங்கஹகே, மேல்மாகாண சபை உறுப்பினர் ரோஸ் ஆகியோரும் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். துஷிதா விஜயமான்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.