புத்தளம் வைத்தியசாலையில் தாதியர் விடுதியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காஸிமின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் தாதியர் விடுதிக்கான இரண்டாம் கட்ட நிர்மாணப் பணி புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச்.எம்.நியாஸின் வேண்டுகோளிற்கிணங்க இந்த இரண்டாம் கட்டப் பணிக்காக பைசல் காசிம் 2 கோரி 50 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கி இருந்தார்.
இதேவேளை,இந்த விடுதியின் முதலாம் கட்ட நிர்மாணப் பணிக்காக பிரதி அமைச்சரால் 2 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டு கடந்த வருடமே முதலாம் கட்டப் பணி நிறைவுற்றது.
இந்த இரண்டாம் கட்ட நிர்மாணப் பணி புத்தளம் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் முஹம்மட் கௌசியின் தலைமையில் இடம்பெற்றது.வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச்.எம்.நியாஸ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -