422 பேருக்கு நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுத்துள்ளோம்

மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன் பெருமிதம்
க.கிஷாந்தன்-
னக்கு பதில் முதலமைச்சர் பதவி கிடைத்தவுடன் முக நூலில் பல்வேறு விதமான வாதங்களை முன்வைத்திருந்தனர். ஒரு சிலர் பதில் முதலமைச்சர் பதவியினை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறார் என கேள்வி எழுப்பி இருந்தனர். எனக்கு அமைச்சுப்பதவிகள் கிடைக்கும் போதெல்லாம் அதனை சரியாக பயன்படுத்தி நுவரெலியா, மாத்தளை, கண்டி ஆகிய மூன்று மாவட்டங்ளுக்கு பல்வேறு வேலைகளை செய்திருக்கின்றேன். இன்று பதில் முதலமைச்சராக கிடைத்த பதவியினை கொண்டு 422 பேருக்கு விவசாய அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கு நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுத்திருக்கிறேன் என முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களில் சேவையாற்றவென 67 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வவு அட்டன சீடா வள நிலையத்தில் 08.10.2018 அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு விவசாய அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
என்னுடைய மூன்று வருட ஆட்சி காலப்பகுதியில் இந்த சமூகத்திற்கு என்னனென்ன செய்திருக்கிறேன் என என்னால் பட்டியலிட்டு காட்ட முடியும். எனவே இந்த அரசு துறை நியமனங்கள் இலகுவாக கிடைப்பதில்லை. போராடியே பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் தங்களுக்கு கிடைத்த இந்த நியமனத்தின் மூலம் தொழிலுக்கு கௌரவம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -