வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த கிழக்கு இளைஞர்கள் அமைப்பு சிறீ லங்கா (EYO-SRILANKA) வின் இலவச தலைமைத்துவம் மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

எஸ்.அஷ்ரப்கான்-
கிழக்கு இளைஞர்கள் அமைப்பு சிறீ லங்கா (EYO-SRILANKA) வின் இலவச தலைமைத்துவம் மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு கடந்த (09) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் அமைப்பின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான தாணீஷ் றகுமத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு இளைஞர்கள் அமைப்பு-ஸ்ரீலங்கா (EYO-SRILANKA), எமினென்ஸ் சொப்ட் சொலுசன் பிறைவட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்த இக்கருத்தரங்கில் சிறப்பு அதிதியாக கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஆலோசனை சபை பணிப்பாளர் நிசாம் மாயல், எமினென்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ஏ.எம்.மாஹிர், கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் செயலாளர் முபாரக் முஸ்தபா, EMINENCE நிறுவனத்தின் ஆலோசகர்களான பொறியியலாளர்களான நியாஸ், றிஷாட் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள், இளைஞர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -