வெலிகந்தை பிரதேச செயலாளராக ஓட்டமாவடியைச் சேர்ந்த எம்.எம். கைருன்னிஸா நியமனம்.


எச்.எம்.எம்.பர்ஸான்-
பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்தை பிரதேச செயலகத்தின் புதிய செயலாளராக ஓட்டமாவடியைச் சேர்ந்த எம்.எம்.கைருன்னிஸா இன்று (19) ம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆறு வருடங்களாக வெலிகந்தை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த இவர் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியினை கற்றுக் கொண்டு உயர் கல்வியை மட்டக்களப்பு வின்சன் கல்லூரியில் தொடர்ந்தார்.
அத்தோடு தென்கிழக்குப் பல்கழைக்கலகத்தில் முகாமைத்துவப் பட்டம் பெற்றதோடு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த முகம்மது முஸ்தபா, சித்தி பரீதா ஆகியோர்களின் மகளான இவர் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் திட்டமிடல் உதவியாளராக பணிபுரியும் எஸ்.ஏ.பைரூஸ் என்பவரின் துணைவியும் ஆவார்.
கல்குடா தொகுதியில் வரலாற்றில் முதற்தடவையாக முஸ்லிம் பெண்மணி ஒருவர் பிரதேச செயலாளராக நியமனம் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -