அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சேருவில பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி..அன்வர் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளருமாகிய அப்துல்லா மஹ்றூப் அவர்களின் அயராத முயற்சியின் பலனாக வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களின் பணிப்புரைக்கமைவாக 50 வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று செல்வநகரில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் அப்துல்லா மஹ்றூப் எம்.பி மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.றிபாஸ் மற்றும் ஹுசைன் ஜெஸீலா, வீடமைப்பு அதிகார சபை மாவட்டப் பணிப்பாளர், கணிய மணல் கூட்டுத்தாபன நிறைவேற்றுப் பணிப்பாளர், எஸ்.எல்.ஏ.றெஸ்ஸாக்(நளீமி) கிராம உத்தியோகத்தர் மற்றும் பொது மக்கள் ஆகியோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.