பெண்கள் தங்கி வாழாது சுயதொழில் முயற்சியில் ஈடுபட வேண்டும் - பிரதேச செயலாளர் றிகாஸ்

றியாத் ஏ. மஜீத்-
முர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் இவ்வருட வாழ்வாதார நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவில் பிரயாணப் பை, கைப் பை மற்றும் பாடசாலைப் பை தயாரித்தல் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (06) சாய்ந்தமருது சமுர்த்தி சமுதாய அடிப்படை சங்கத்தின் கேட்போர் கூடத்தில்இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி லதாகரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், கணக்காளர்ஏ.எல்.எம்.நஜிமுதீன், விதாதா வள நிலைய பொறுப்பதிகாரி எம்.முஸம்மில், சமுர்த்தி முகாமையாளர்களான என்.ஜூனைதா,எம்.எஸ்.எம்.மனாஸ், ஏ.கபூர், திட்ட உதவியாளர் எம்.எம்.எம்.முபாறக், சமுர்த்தி வலய உதவி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத்உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பயிற்சி நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 15 யுவதிகளுக்கு சான்றிதழ்களினை நிகழ்வின் அதிதிகளினால்வழங்கி வைக்கப்பட்டது.
சமுர்த்தி பயனுகரிகளின் குடும்பத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட யுவதிகளுக்கு இப்பயிற்சி நெறி வழங்கப்பட்டதுடன்இவர்கள் சுயமாக தங்களது தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு தையல் இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கைஎடுப்பதாக பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் உரையாற்றும் போது தெரிவித்தார்.
பெண்கள் தனி ஒருவரின் வருமானத்தில் தங்கி வாழாது அவர்களும் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு தங்களதுவருமானங்களை பெற்றுக்கொள்வதனால் குடும்பச் சுமை குறைவதோடு வறுமையும் குறையும் எனவும் பிரதேச செயலாளர்றிகாஸ் மேலும் தெரிவித்தார்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -