ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் "வீட்டுக்கு வீடு மரம்" நடுகை வேலைத்திட்டம் கல்முனை பிரதேசத்தில் விமர்சையாக இன்று(01) இடம்பெற்றது.
அரச முயற்சியாண்மை கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவர் எச் .எம்.எம்.ஹரீஸ் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை மாநகர சபையின் 17ம் வட்டார உறுப்பினர் ஏ .எம்.பைரூஸ் அவர்களின் தலைமையில் இன்று(1) அவரின் இல்லத்திலிருந்து மரம் நடுகை இடம்பெற்றதுடன் மற்றும் 17ம் வட்டாரத்தில் உள்ள மக்களின் வீடுகளில் மரங்கள் நடப்பட்டது இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல்மஜீத் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் மற்றும்
அரச முயற்சியாண்மை கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சரின் செயலாளர் நெளபர் ஏ.பா வா,ஏ.எம்.றினோஸ் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.