புணர் வாழ்வளிக்கப் பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இன்பராசா என்பவரால் நடாத்தப் பட்ட ஊடக சந்திப்பொன்றில் காத்தாங்குடி, மூதூர், கிண்ணியா உட்பட முஸ்லீம்களிடம் விடுதலைப் புலிகளின் 5000 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இருப்பதாகவும், அதனால் இந் நாட்டு சிங்கள, தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறிய சம்பவம் ஒரு சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தலங்களில் உலா வந்ததை இட்டு (30) கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் இன்பராசாவுக்கு எதிராக கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி அவர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டது.
உண்மைக்குப் புறம்பான இவ்விடயம் குறிப்பிட்ட பிரதேச மக்களை மாத்திரம் அன்றி இந் நாட்டு முஸ்லீம்கள் அனைவரின் உள்ளங்களையு மிகவும் புன்படுத்தியுள்ளதோடு இம்முஸ்லீம்களுக் கெதிராக ஏதும் திட்டமிட்ட சதி ஒன்று அரங்கேற்றப் படலாம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியள்ளது.
எனவே இவ்வாறான இன மத பேதங்களை உண்டாக்கும் சதிகாரர்களுக்கு எதிராக எமது அரசும் பொலீஸாரும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு இன்று கிண்ணியா பொலீஸில் அது குறித்த முறைப்பாட்டையும் இது தொடர்பாக குறித்த இனவாதத்தை தூண்டும் இன்பராசாவுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாட்டை கிண்ணியா நகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் எம்.எம்.மஹ்தி கிண்ணியா பொலிஸில் பதிவு செய்தார்.