பிரதியமைச்சர் காதர் மஸ்தான் அனுதாபம்.
கலாநிதி ஹஸ்புல்லாஹ் சேரின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயருற்று அதிர்ச்சியடைந்தேன்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
படித்து கலாநிதி பட்டம்பெற்றும் அவை அத்தனையும் வைத்து தனது சமூகத்தின் விடிவுக்காக போராடிக்கொண்டிருந்த மேதையாக கலாநிதி ஹஸ்புல்லா விளங்கினார்.
வெளியேற்றப்பட்ட வடபுலத்து முஸ்லிம்களின் பூர்வீகத்தையும் அம்மக்களின் மீள்குடியேற்றத்தையும் சர்வதேச மேடைகளில் பிரேரணைகளாக முன்வைக்க அவர்செய்த தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் யாரும் இலகுவில் மதிப்பிட்டு விட முடியாது.
வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பில் அவர் எழுதிய நூற்கள் பெறுமதியான ஆவணங்களாக போற்றப்படுகின்றன.
எமது மக்களின் மீள்குடியேற்றம் இன்னும் பூரணமாகாத நிலையில் அன்னாரின் மறைவானது வடபுலத்து முஸ்லிம்களுக்கு பேரிழப்பாகும்.
எமது மக்களின் மீள்குடியேற்றம் இன்னும் பூரணமாகாத நிலையில் அன்னாரின் மறைவானது வடபுலத்து முஸ்லிம்களுக்கு பேரிழப்பாகும்.
அல்லாஹ்தஆலா அன்னாரை பொருந்திக் கொள்வானாக.
காதர் மஸ்தான்,
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சரும்.
காதர் மஸ்தான்,
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சரும்.
